Tuesday, August 13, 2013

ஜாதீ

எங்க தாத்தா பெயருக்குப்பின்னால ஜாதி இருந்துச்சு. எங்க அப்பா தேவையான இடத்துல ஜாதி போட்டுக்கிட்டாரு. ஆனா நான் என் பேருக்குப்பின்னால எந்த இடத்துலயம் ஜாதி போடுறதில்ல. 

இதுதான் இண்ணக்கி இருக்கிற எல்லார் வாழ்கைலயும் நடந்திருக்கும். பேருக்குப்பின்னால ஜாதி போடுறத கேவலமாவும், அத ஓரு படிப்பறிவற்றவன் செயலாவும் கருதுற மனோநிலதான் அதுக்குக் காரணம். இந்த நில தமிழ் நாட்டுல உருவாகுறதுக்கு முக்கியக் காரணம் பெரியார்ங்கிற மகா மனுசன். 

ஆனா இண்ணக்கி வெகுசன மீடியால இருக்கிற சிலர் – ஷ் அய்யர், னனி அய்யர் ன்னு தன்ன அடயாளப்படுத்திக்கிடுறாங்க. இந்தக்கேவலத்தப்பாத்து கோவப்பட்டப்பதான் எனக்கொரு கவித தோணுச்சு

“பெயருக்குப் பின்னாலுள்ள
ஜாதீய வாலைக் கத்தரிக்காமல்
நாம்
பரிணாம வளர்ச்சி
அடைந்து விட்டதாய்ச் சொன்னால்
குரங்குகூடச் சிரிக்கும்.”

No comments: