Tuesday, August 13, 2013

ஜாதீ

------- மேன்னன். -------- நாயர், --------- ரெட்டி, ---------- நாயுடு, -------- ராவ், -------- பண்டிட், --------- ஷெட்டி இப்படி பேருக்குப்பின்னால உள்ள வால்கள் பல விதமா உண்டு. ஆனா இது எதுவும் தமிழ் மாநிலத்துக்கு உட்பட்டதில்ல. இந்த வால்கள வச்சே இது எந்த மாநிலத்துக்குள்ளதுன்னு ஓரளவுக்கு யூகிக்க முடியும். இந்த வால்கள் மொதல்ல நுழஞ்சது சினித்துறை மூலமாத்தான். 

இங்க சில ஜாதி வெறி பிடிச்ச அரவேக்காடுகளத் தவிர வேற யாரும் தன் பேருக்குப்பின்னால ஜாதி போடுறதில்ல. தமிழ் நாட்டத் தாண்டி வெளில பாத்தா ஜாதிங்கிறது வலுவா வேர் பிடிச்சு நிக்கிறதப் பாக்க முடியுது. அவங்க ஊர்ல ‘இதுல்லாம் அசிங்கம்டா . . . மானமுள்ள மனுசனுக்கு இது அழகில்ல’ ன்னு சொல்லிக் கொடுக்குறதுக்கு ஒரு பெரியார் இல்லாமப்போனதுதான் காரணமா இருக்கலாம்.

ஆனா அந்த வெளி மாநிலக்காரனப் பாத்துப் பரிதாப்பபடாம, ஜாதிங்கிற அசிங்கத்த நம்ம ஊர் சினிமாக்காங்க சிலரும் அப்பிக்கிடுறதப் பாக்கும் போது வேதனயாத்தான் இருக்கு.

No comments: